சனி, 15 ஆகஸ்ட், 2009

தியானன் மென் சதுக்கம் -- சீன வரலாறின் கரிய பக்கங்கள்.







1989 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த மாணவர் கிளர்ச்சியான "தியானன் மென்" சதுக்கப்படுகொலைகள், சீன வரலாறின் கரிய பக்கங்கள்.கடந்த ஜூன் மூன்று,அதன் இருபதாம் ஆண்டு நினைவு நாள்.இதை உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்கள்,சிந்தனைவாதிகள்,மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் அனுஷ்டித்தனர்.
ஆனால் சீனாவை பொறுத்தவரை "தியானன் மென் " சதுக்கம் பற்றி நினைவு கூறப்படாத நிலையே இன்னும் தொடர்வதாக ஊடகங்கள் சொல்கின்றன.மேலும் இந்த நிகழ்வை தன் வானளாவிய செல்வாக்கால் மூடி மறைக்கவும் முயற்சி செய்கிறது.எல்லா ஊடகங்களையும் கட்டுப்படுத்திவிடலாம்.ஆனால் இணையதளங்களில் பரவும் செய்திகளை யாரும் தடுக்க முடியாது என்று நாம் நினைக்கலாம்.மேற்குலகை பொறுத்தவரை சீனாவின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ஒரு சிறிய செய்தி.
சீன அரசுக்கு பணிந்து கூகிள் போன்ற பெரும் நிறுவனம் தன் தேடு தளத்தில் "தியானன்மென் "படங்களை பல ஆண்டுகளாகவே தணிக்கை செய்து வைத்திருக்கிறது.அவற்றை யாரும் பார்க்ககூடாதாம்.இதே போல யாகூ மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களும் சீன அரசுடன் ஒத்துழைக்கின்றன.சீன அரசை விமர்சித்து அங்கே எழுதிவரும் பலரின் இணைய முகவரிகளை அரசுக்கு கொடுத்து ஒற்றர்களின் பணியை எளிமையாக்கிருக்கின்றன.பிரபல எழுத்தாளரான " நாகார்ஜுனன்" தன் வலைப்பதிவு ஒன்றில் தியனன்மென் பற்றிய அறிய புகைப்பட தொகுப்பை வைத்திருந்ததாக எனது நண்பர்கள் தெரிவித்து இருந்தனர்.ஆனால் பல வழியில் முயற்சி செய்தும் போதுமான புகைப்படங்கள் கிடைக்கவில்லை.இது போன்ற தொழில் நுட்ப படுகொலைகளை நிகழ்த்திய சீன அரசின் கையில் சிக்கி மாண்டு போன எண்ணற்ற மனிதர்களை நாம் இப்போது நினைவு கூர்வோம்.

1 கருத்து:

  1. நல்ல முயற்சி.சோசியலிச நாடுகள் தன் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டதற்கு இது ஒரு மிகச்சிறப்பான உதாரணம்.

    பதிலளிநீக்கு